உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை

Published On 2023-06-29 08:50 GMT   |   Update On 2023-06-29 08:50 GMT
  • ராமநாதபுரத்தில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.
  • முருகேசன் தலைமை தாங்கினார்.

கீழக்கரை

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர் களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

செயலாளர் லிங்கதுரை முன்னிலை வகித்தார். பொருளாளர் கனகராஜ் வரவேற்றார். அமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சட்ட ஆலோசகர் நவின் அ.மாரி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலையச் செயலாளர் வழிவிட்ட அய்யனார், மகளிரணி செயலாளர் செல்வராணி ஆகியோர் பொறுப்பாளர் களுக்கு பயிற்சி அளித்தனர்.

மாவட்ட துணைத்தலைவர்கள் அந்தோணி சவரிமுத்து பூமிநாதன், பைலட், ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வினோத் கண்ணா, மணிகண்டன், ஹரிகர கிருஷ்ணன், மகளிர் அணி துணை செயலாளர்கள் மனோகரி, சுபா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜூடு லாசரஸ், மோகன், ஸ்டீபன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், கார்த்திக், சசிக்குமார், வட்டார பொறுப்பாளர்கள் அருட்செல்வன், மோகன், ஹிலால் அகமது, மாதவன், மாணிக்கம், அருமைநாதன், முனியசாமி, இபுராஹிம்சா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags:    

Similar News