உள்ளூர் செய்திகள் (District)

சலிமுல்லா கான்

ரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிள்

Published On 2023-01-21 08:02 GMT   |   Update On 2023-01-21 08:02 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் த.மு.மு.க. சார்பில் ரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
  • அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு அவசர தேவைக்கு 158 பேருக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் நிருபர் களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட த்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு மருத்துவ உதவியாக ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம், சிறு தொழில் உதவி ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம், வீடு கட்டுவதற்கு ரூ. 35 ஆயிரம், உயர் கல்வி உதவி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம், விதவை மாதாந்திர குடும்பச் செலவுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம், கல்வி உதவி ரூ. 2 லட்சத்து 96 ஆயிரம், கல்லூரியின் நிர்வாக செலவு ரூ. 7 லட்சம், அனைத்து சமுதாய மக்களுக்காக புதிய ரூ. 26 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், குடும்ப நிவாரண நிதி ரூ.1 லட்சம் உதவி, வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் ரூ. 87 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதில் 306 பேர் கடன் பெற்று பல்வேறு தொழில் களை மேற்கொண்டு தற்போது அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது. மேலும் பல்வேறு வகையான உதவிகளின் மூலம் த.மு.மு.க, சார்பில் கடந்த ஆண்டுரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அனைத்து சமூக மக்களுக்காக ரத்ததானம், மருத்துவ முகாம் சேவை யாற்றிய தமுமுக தொண்டர் களை கவுரவிக்கும் வகை யில் மனிதநேய சேவை செய்த ராமநாதபுரம் த.மு.மு.க.விற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் ராமநாத புரம் மருத்துவ கல்லூரி சார்பில் இரண்டு மனிதநேய விருதை வழங்கினர். அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு. அவசர தேவைக்கு 158 பேருக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது த.மு.மு.க., ம.ம.க. மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம், ம.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆஷிக் சுல்தான், அப்துல் ரஹீம், பொருளாளர் ஹமீது சபிக் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News