உள்ளூர் செய்திகள்
ஆற்காடு மாங்காட்டில் கிராமசபை கூட்டம்
- கலெக்டர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் 74வது குடியரசுதினத்தை யொட்டிநடைபெற்ற கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கண்ணகி தலைமையில் நேற்று நடைபெற்றது
ராணிப்பேட்டை கோட்டாச்சியர் வினோத்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சி) குமாா், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி க்குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு தாசில்தார் செ.ரவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்பிரபாகரன், அண்ணாமலை, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் சரன்ராஜ், கஜபதி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.