உள்ளூர் செய்திகள் (District)

பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் எந்திரம்.

மணல் கடத்திய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

Published On 2023-10-27 07:37 GMT   |   Update On 2023-10-27 07:37 GMT
  • வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள இலுப்பை தண்டலம் கிராமத்தில் அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா இன்று அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் அதிகாரிகளுடன் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் மணல் கடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்டவுடன் மணல் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா மணல் கடத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்த வாகனங்களை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News