உள்ளூர் செய்திகள்

வயது குறைந்த நபருடன் தொடர்பு: கள்ளக்காதலனை, மகளுடன் சேர்ந்து தாக்கிய பெண்

Published On 2023-06-06 11:12 GMT   |   Update On 2023-06-06 11:12 GMT
  • ஆத்திரம் அடைந்த பெண் தனது மகள் மற்றும் சிலருடன் சேர்ந்த வாலிபரை தாக்கினார்.
  • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கரூரை சேர்ந்த 36 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ஒரு மடத்தில் தங்கி செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெண்ணின் மகளுக்கு தெரிய வரவே அவர் தனது தாயை கண்டித்தார். இதனால் பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

சம்பவத்தன்று வாலிபர் மடத்துக்கு சென்றார். அப்போது பெண் அவருடன் பேசாமல் இருந்தார். உடனடியாக வாலிபர் தனது கள்ளக்காதலியிடம் சென்று ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண் தனது மகள் மற்றும் சிலருடன் சேர்ந்த வாலிபரை தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆழியாறு போலீசார் கள்ளக்காதலனை மகளுடன் சேர்ந்து தாக்கிய பெண் அவரது மகள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News