உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கால்பட்டு பகுதியில் குப்பைத்தொட்டி நிரம்பி குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்

கடலூர் சொரக்கல்பட்டில் குப்பைகள் அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம்

Published On 2023-02-19 08:46 GMT   |   Update On 2023-02-19 08:46 GMT
  • மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொண்டு சென்று வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது குப்பை கிடங்கு இல்லாததால் 3இடங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர். 

இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற முடியாத காரணத்தினால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு பகுதியில் குப்பை தொட்டிகள் முழுவதும் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறி இருக்கின்றது இதனை நாய், பன்றிகள் கிளறி செல்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் அதிகாரிகள் சுகாதாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பொதுமக்களின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News