உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-04 10:06 GMT   |   Update On 2023-04-04 10:06 GMT
  • சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவுபெற்றது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்ச்சியாக நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை தாங்கினார்.

நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

பேராசிரியர் திலகர், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.

பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலையில் நிறைவுபெற்றது.

Tags:    

Similar News