ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கு பூமிபூஜை
- இருவழிதடமாக அகலபடுத்த ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கும் பணிக்கு பூமிபூஜை நடைப்பெற்றது.
- தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சி சாலை முதல் உத்தனப்பள்ளி வரை நெடுஞ்சாலைதுறை மூலம் சாலை மேம்பாட்டு திட்டத்தில் இடைவழி தடத்திலிருந்து இருவழிதடமாக அகலபடுத்த ரூ.11 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணிக்கும் பணிக்கு பூமிபூஜை நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக்கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தேன்கனி க்கோட்டை உதவி கோட்ட பொறி யாளர் திருமால்செ ல்வன், ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர்மன்னன், முன்னால் பேருரட்சி தலைவர் சையத் அசேன், ஒப்பந்ததாரர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகராஜ், கிரி, சண்முகம், அகிலா சாதிக், வச்சலா லட்சுமைய்யா, இந்திய கம்யூனிட்டு கட்சி நகர செயலாளர் மது, துணைசெயலாளர் குருராஜ், ஜெயராமன், நகராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.