உள்ளூர் செய்திகள்

ஓமலூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்

Published On 2023-11-14 08:11 GMT   |   Update On 2023-11-14 08:11 GMT
  • ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
  • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

சேலம்:

மேட்டூர் மின் பகிர்மான வட்டம் ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News