உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புஅ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-08-26 06:34 GMT   |   Update On 2023-08-26 06:34 GMT
  • சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

சேலம்:

சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

திருச்செங்கோடு

இதனை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜவேல், மல்லிகா, கார்த்திகேயன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், எட்டிமடை அ.தி.மு.க. நிர்வாகி குணசேகர், அசோக்குமார், சரவணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் லோகநாதன், செந்தில்குமார், முனியப்பன், குணவேல், சிறு மொளசி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர நிர்வாகி சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபோல் நாமக்கல்லில் ஸ்ரீதேவி மோகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீவட்டிப்பட்டி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், வேப்பிலை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தீவட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமசாமி வெள்ளையன் என்கிற ராஜமாணிக்கம், ராஜகுரு, பீட்டர், ரஜாக், மணி, ராஜேஷ், நைனாகாடு ராஜா, பாபுலால், வேலு, நாராயணன் குலாப்ஜான், வேப்பிலை ரவி, காசி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாழப்பாடி

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வாழப்பாடி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதில் நிர்வாகிகள் குபேந்திரன், சிவக்குமார், பத்மாவதிகுமரன், செல்லையா, பார்த்திபன், வெங்கடேசன், அனிதா பழனிமுத்து, பழனிசாமி, மதியழகன், ராஜா, சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News