உள்ளூர் செய்திகள்
இளம்பிள்ளை-மல்லூர் பகுதிகளில்நாளை மறுநாள் மின் நிறுத்தம்
- மல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, திருமனூர், பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம் பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், இளம்பிள்ளைநகர், காந்திநகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.