உள்ளூர் செய்திகள்

மக்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்த காட்சி. 

ஏற்காடு சேர்வராயன் கோவில் தேரோட்டம்

Published On 2023-05-31 07:13 GMT   |   Update On 2023-05-31 07:13 GMT
  • ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.
  • ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் தேரோட்டம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது.

விழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராயப்பெருமாள், காவிரியம்மாள் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் நடந்தது. தேரை ஏற்காடு எம்.எல்.ஏ சித்ரா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னவெள்ளை கோகிலா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பு வெங்கடாஜலம், மஞ்சுளா ராமசந்திரன், செந்தில் பிரபு, தனலட்சுமி சின்னசாமி, ராஜேந்திரன், சிவசக்தி ரவிசந்திரன் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், மலை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் ஏற்காட்டை சுற்றியுள்ள 72 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு நடத்தினர். தேர் வரும் வழியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.

Tags:    

Similar News