உள்ளூர் செய்திகள்
சேலம் அருகே மளிகை கடையில் கூரையை உடைத்து பணம் கொள்ளை
- சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த மாசிநாயக்கன்பட்டி யில் ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது. வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி் விட்டு சென்றனர்.
- இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையின் கல்லாவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த மாசிநாயக்கன்பட்டி யில் ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் நேற்றிரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி் விட்டு சென்றனர்.
இந்தநிலையில் இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையின் கல்லாவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.
இதனால் நேற்றிரவு யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை எடுத்து சென்றதை அறிந்த கடை உரிமையாளர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.