உள்ளூர் செய்திகள்

சேலத்தில் வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

Published On 2023-09-30 09:35 GMT   |   Update On 2023-09-30 09:35 GMT
  • ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
  • அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்(35), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வில்வேஸ்வரன் (22), தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் தெருவை சேர்ந்த நாகராஜன் (20) என்பது தெரியவந்தது.

இவர்கள் போலீசார் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வாலிபர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News