சேலத்தில் மாணவி கூட்டு பலாத்காரம்:கைதான அண்ணன், தம்பி உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
- ஜாகிர் அம்மாபாளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார்.
- கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.
சேலம்:
சேலம் கருப்பூர் அடுத்த தேக்கம்பட்டி வட்டக்காட்டை சேர்ந்தவர் வினித் (வயது 23). திருமண மாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.
இவர் ஜாகிர் அம்மாபா ளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார். அப்போது கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் மாண வியை மறைவான இடத் திற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த வினித்தின் தம்பி விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகாஷ் (19), அருள்குமார் (23), சீனிவாசன் (23) ஆகியோர் சிறுமிக்கு அடுத்த டுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அதேபோல மறுநாளும் அந்த மாணவிக்கு 5 பேரும் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தந்தையிடம் கூறி கதறி அழுதார். மாணவியின் தந்தை புகாரின்படி, சூரமங்க லம் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, அண்ணன், தம்பி உட்பட 5 பேரை நேற்று கைது செய்த னர். 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர்.