உள்ளூர் செய்திகள்
- வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
- குமரவேல், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
குருபரபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திலகம் மற்றும் பணியாளர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏஜி ஜாய் சுரேஷ் குமார் (கனரா வங்கி மேலாளர்- ஓய்வு) மற்றும் மல்லபாடி மக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் குமரவேல், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.