- மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக வழிகாட்டி ஆசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பள்ளி வளர்ச்சி மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும், மாணவர்களின் கற்பித்தல் திறன் பற்றியும் கலந்துரையாடினர்.
இல்லம் தேடி கல்வியில் மாணவர்கள் பங்குபெற கேட்டுக்கொள்ளப்பட்டது.
கலை திருவிழா, குழந்தை களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு, இரண்டு வகுப்பறை கட்டிடம், கழிவறை கட்டி முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அ டையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.
மேலும், அனைவரும் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கூட்ட நிறைவில் மறைந்த உறுப்பினர் ஜெகதீசுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முடிவில் ஆசிரியர் மதன்கு மார் நன்றி கூறினார்.