உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழாவை ஆர்வமுடன் கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள்

Published On 2022-08-10 08:57 GMT   |   Update On 2022-08-10 08:57 GMT
  • குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
  • மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தென்காசி:

குற்றாலத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கிய சாரல் திருவிழாவில் தோட்டக்கலை துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்துகண்டு ரசித்தனர்.

குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து பராசக்தி கல்லூரியில் புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது.

காண வரும் மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழாவில் ரூ.ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ரூ.7 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News