உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நட்டு உலக சாதனை

Published On 2022-12-03 09:58 GMT   |   Update On 2022-12-03 09:58 GMT
  • 15,019 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.
  • பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அரூர்,

பள்ளிக்கல்வித்துறை சார்பாக தருமபுரி மாவட்ட அளவில் தேசிய பசுமைப்படை சார்பாக அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 15,019 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் அரசு பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து உலக சாதனை செய்தனர். யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இந்த தேசிய பசுமை படை சாதனை பதிவு செய்யப்பட்டது.

இந்த உலக சாதனையை பாராட்டி ஒருங்கிணைப்பா ளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக சான்றிதழ் சாதனை சான்றிதழ் பெற்ற அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி துரையை மாவட்ட முதன்மை கல்வி அலுவல,ர் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News