3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணிக்கு உற்சாக வரவேற்பு
- தடங்கம் சுப்ரமணி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
- 11 வாகனங்களில் அழைத்துச்சென்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தடங்கம் சுப்ரமணி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி உள்பட நிர்வாகிகள் தருமபுரிக்கு வருகை தந்தனர். அவர்களை மாவட்ட தி.மு.க. சார்பாக தாரை, தப்பட்டை முழுக்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை வரவேற்பதற்காக கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை 11 வாகனங்களில் அழைத்துச்சென்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம் பெரியண்ணன், உடன் இருந்தனர்.
அதனையடுத்து புதிய நிர்வாகிகளுக்கு சால்வை, மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி உட்பட புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து தருமபுரி நகரின் 4 ரோடு பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கும், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து தி.மு.க. மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவால யத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.