உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த பெண்ணுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு கேடயம்

Published On 2023-03-10 09:49 GMT   |   Update On 2023-03-10 09:49 GMT
  • 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, பரிசுகளும் வழங்கப்பட்டன.
  • முடிவில் ஐ.டி. பிரிவு தலைவர் கார்த்திக் பாரத் நன்றி கூறினார்

சுவாமிமலை:

கும்பகோணம் கிழக்கு பா.ஜனதா சார்பில் கிழக்கு மாநகர தலைவர் பொன்ராஜ் தேவர் தலைமையில் மகளிர் தினவிழா நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

மேலும், 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சோழராஜன், மயிலை மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், பட்டுக்கோட்டை மகளிர் நிர்வாகி குயிலி, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி தலைவர் சுனிதா, மாநகர மகளிரணி தலைவர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்பகோணம் மாநகர பொதுச்செயலாளர் பொன்முடி செய்திருந்தார்.

முடிவில் ஐ.டி. பிரிவு தலைவர் கார்த்திக் பாரத் நன்றி கூறினார்.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News