10 நிமிடத்தில் 400 மரக்கன்று நடும் சாதனை
- 10 நிமிடத்தில் 400 மரக்கன்று நடும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
- ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
பசுமை தமிழக இயக்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து மாவட்டத்தினை பசுமையானதாக ஆக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 20 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடும்விழா மாவட்டம் முழுவதும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமையிலும், காளாப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜு தலைமையிலும், செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் நடந்தது.
இதில் வேம்பு, புளி, பூவரசு, மா, நெல்லி, புங்கை, மகோகனி, நீர்மருது போன்ற நாட்டுவகை மரக்கன்றுகள் 10 நிமிடத்திற்குள் 400 மரக்கன்கள் நடவு செய்து சாதனை புரிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜு, தலைமை ஆசிரியர்கள் சுபா, முனியாண்டி, ரமேஷ் மற்றும் ஒன்றிய துணைச்சேர்மன் சரண்யா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தம்மாள், அகிலா கண்ணன், ரமேஷ், மகேஷ் கிராம நிர்வாக அலுவலர் அருண், உதவியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.