உள்ளூர் செய்திகள்

திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

Published On 2022-08-05 09:52 GMT   |   Update On 2022-08-05 09:52 GMT
  • திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை நகர் 26-வது வார்டு சோனையகோயில் எதிர்ப்புறம் உள்ள சாலையில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பஸ் நிலையம் எதிர்புறத்தில் நவீன கட்டண கழிப்பறை அமைக்கும் பணி, ஆஞ்சநேயர் கோவில் செட்ஊரணி கரையை சுற்றி பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் கார்கண்ணன், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர், நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், கார்த்திகேயன், சரவணன், ராமதாஸ், விஜயக்குமார், சண்முகராஜன், மகேஷ், விஜயக்குமார், வீரகாளை மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News