உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்க பூமிபூஜை

Published On 2022-12-12 07:18 GMT   |   Update On 2022-12-12 07:18 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது.
  • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் இருந்தது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சரண்யா செந்தில்நாதனிடம் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். தற்போது காந்தி நகர் முதல் மற்றும் 2-வது வீதிகளில் சாக்கோட்டை யூனியன் தலைவர் நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமைதாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர்கள் செல்வி, செந்தில், கிளை செயலாளர்கள் ராமு, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News