உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்.

முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா

Published On 2023-03-31 08:28 GMT   |   Update On 2023-03-31 08:28 GMT
  • முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா நடந்தது.
  • அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ளது தாயமங்லம் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருவிழா தொடங்கு வதற்கு 5 நாட்கள் முன்பே மதுரை மாட்டுதாவணி பஸ்நிலை யத்தில்இருந்து தாயமங்லம் கோவில் வரை அரசுபஸ் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த29-ந்தேதி பங்குனி பெருந்திருவிழா தொடங்கியது. நேற்று முதல் தினமும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் தாயமங்லம் சென்று வருகிறது. வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பொங்கல் விழா, 6-ந்தேதி தேரோட்டம், 7-ந்தேதி பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூபல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முன்னதாக முதல்நாள் விழாவில் மூலவர் அம்மனுக்கு 11 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, நவசக்தி ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது.

மேலும் சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோ ட்டை, கமுதி, பரமக்குடி, காளையார் கோவில் ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

விழாஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News