உள்ளூர் செய்திகள்
நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி முப்பெரும் விழா
- நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி முப்பெரும் விழா நடந்தது.
- கேக் வெட்டி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம், செவிலியர்கள் தினம் மற்றும் நர்சிங் பயின்ற மாணவர்களின் நிறைவு நாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்த கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு காரைக்குடி, திருப்புத்தூர், மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள், செவிலியர்கள் தின விழா, நிறைவு நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.