உள்ளூர் செய்திகள்
- திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர் மற்றும் மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.