உள்ளூர் செய்திகள்
காளையார்கோவில் அருகே மக்கள் தொடர்பு முகாம்
- காளையார்கோவில் அருகே வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், பள்ளிவயல் குரூப், பள்ளித்தம்பம் கிராமத்தில் உள்ள நாடகமேடையில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.