உள்ளூர் செய்திகள் (District)

சுரங்க மலைசாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-18 08:11 GMT   |   Update On 2022-09-18 08:11 GMT
  • சுரங்க மலைசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் இருந்து வரும் சுரங்க மலை சுவாமி கோவிலில் வருடபிஷேக விழாவை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக பால், தயிர், திருமஞ்சனம் முதலிய 7 பொருட்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகளால் பெரிய இடையன், சின்ன இடையன் கண்மாய்களில் இருந்து தீர்த்தங்களை தலையில் சுமந்து கோவில் முன்பாக உள்ள கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக தண்ணீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து ெகாண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடு களை பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகள் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News