- மெகா சிறப்பு தூய்மைப்பணி முகாம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நடந்தது.
- நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி இணைந்து, மெகா சிறப்பு தூய்மைப்பணி முகாம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நடந்தது. நிகழ்ச்சியில், மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், மாணவிகள் கே.ஆர்.பி. அணையில் உள்ள பூங்கா, நீர் நிலைகள், புல்வெளி மற்றும் சாலைகள் உள்பட அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தினார்கள். முடிவில் ஊராட்சிகள் பிரிவு கண்காணிப்பாளர் சுபராணி, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர்கள் கஸ்தூரி, கலைவாணி, நவீன், ரோஜா, பாலாஜி, திவ்யபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.