உள்ளூர் செய்திகள் (District)

வாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் 'திடீர்' சாவு

Published On 2023-01-31 09:51 GMT   |   Update On 2023-01-31 09:51 GMT
  • 1998-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
  • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கோவை,

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியம் (வயது 55). இவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு 11.45 மணியளவில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்பிரமணியம் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பணியின் போது இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடந்தூர். இவர் 1998 -ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு அல்லிராணி என்ற மனைவியும் 1 மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மாரடைப்பில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அஞ்சலி 

Tags:    

Similar News