உள்ளூர் செய்திகள் (District)
பாலவடரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
- ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவிய ெபாடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலவட ரங்கநாதர் கோயில் உள்ளது.
நேற்று இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பாலவடரங்கநாதர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் மருத்துவப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆலய அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.