உள்ளூர் செய்திகள்

தானியத்தில் அட்சரம் எழுதி கல்வியை தொடங்கும் குழந்தை.

எழுத்தறிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-10-06 09:51 GMT   |   Update On 2022-10-06 09:51 GMT
  • நெல்களில் எழுத வைத்தும், நோட்டு பேனா பொருட்களை சிவனிடம் வைத்தும் வழிபட்டனர்.
  • குழந்தைகளுக்கு நாவில் தேனால் எழுதப்பட்டது.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே இன்னம்பூரில் பிரசித்தி பெற்ற கல்விக்குரிய சிறப்பு ஸ்தலமான எழுத்தறிநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பொதுமக்கள் காலை முதல் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், நெல்மணிகளில் குழந்தைகளை எழுத வைத்தும், நோட்டு பேனா உள்ளிட்ட பொருட்களை சிவனிடம் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கு நாவில் தேனால் எழுதப்பட்டும் வருகிறது.

Tags:    

Similar News