வேதாரண்யம் அன்னப்பசாமி கோவிலில் சிறப்பு யாகம்
- புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பூரணா புஷ்கலா சமேத அன்னப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 7-ம் ஆண்டை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் குடங்கள் வைத்து சிறப்பு பூஜை யாகம் நடைபெற்றது.
பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு சீர் பலகாரம், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சென்னை சேர்ந்த குருமூர்த்தி, லட்சுமி நாராயணன், குமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.