உள்ளூர் செய்திகள்

நீடாமங்கலத்தில் கரும்பு விற்பனை மும்முரம்

Published On 2023-01-11 09:31 GMT   |   Update On 2023-01-11 09:31 GMT
  • நீடாமங்கலத்தில் கரும்பு விற்பனை மும்முரம் நடை பெற தொடங்கி உள்ளது.
  • ஒரு கட்டு கரும்பு ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவாரூர்:

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் என்றாலே செங்கரும்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

பொங்கலுக்கு இன்னும் 4நாட்களே இருப்பதால் கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் ஆதனூர், நெடுவாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நீடாமங்கலத்தில் கரும்பு கடைகள் அமைத்து கரும்பு விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு கட்டு கரும்பு ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள், மண்பாண்டங்கள் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News