உள்ளூர் செய்திகள் (District)
லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்
- சிவாஜி நகரில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் சிரம்மபட்டு வருகின்றனர்.
- போரை செயல்படுத்தினால் அந்த பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி 44 வது வார்டு சிவாஜி நகரில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வசதியின்றி பொது மக்கள் சிரம்மபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் போர் வசதி இருந்தும் பயன்படாமல் உள்ளது.
தற்போது அந்த பகுதியில் மாநகராட்சி சார்பாக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
அந்த பகுதியில் போர் செயல்பட தொடங்கினால் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே சிவாஜி நகர் பகுதியில் உள்ள போரை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தப் பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கேட்டபோது அவர் உடனடியாக அதிகாரியை அைழத்து நாளை முதல் தண்ணீர் தடையின்றி வழங்க உத்தரவிட்டார்.