உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

100 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2022-06-20 09:37 GMT   |   Update On 2022-06-20 09:37 GMT
  • பிரதாபராமபுரம் கிராமத்தில் 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
  • பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சரவணன், சாந்தி சரவணன் மற்றும் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் 100 குடும்பங்களுக்கு 6 அடி உயரமுள்ள பலா மரக்கன்று, 5 அடி உயரமுள்ள கொய்யா மரக்கன்று, தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை பிரியங்கா ஒருங்கிணைத்தார். பயனாளி களுக்கு லெட்சுமணன், சிவாகார்த்திக், அழகேசன் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினர். சரவணன் பயனாளிகளின் வீடு தோறும் சென்று மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News