பண்ருட்டியில் சாராய வியாபாரிகள் மேலும் 6 பேர் கைது
- பண்ருட்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
- போலீசார் நேற்று இரவு முழுவதும் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பண்ருட்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் பணருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் திருவாமூர் அய்யனார் கோவில் தெரு சரவணன் (வயது 40) எனதிரிமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு லிங்கநாதன் (49), காமாட்சி பேட்டை டேங்க் தெரு, கலியன் (70), வேலன்குப்பம் வடக்குதெரு விக்ரமன் (25), புதுப்பாளையம் கோவில் தெரு சதாசிவம் (55), கானஞ்சாவடி தெற்கு தெரு ஏழுமலை (36) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இவர்களை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.