உள்ளூர் செய்திகள் (District)

பிள்ளைகளால் கைவிடப்பட்ட 90 வயது மூதாட்டி... அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை

Published On 2024-02-16 06:56 GMT   |   Update On 2024-02-16 09:26 GMT
  • மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார்.
  • சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

    திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி ஜானகி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் மற்றும் மகளை வளர்க்க மூதாட்டி ஜானகி பெரும் பாடுபட்டுள்ளார்.

மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார். மேலும் சொத்துக்களை மூதாட்டி ஜானகியுடம் இருந்து பிள்ளைகள் எழுதி வாங்கியுள்ளனர். மருமகள்களாலும் மூதாட்டி ஜானகி தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வருவாய்துறையினர் காலம்தாழ்த்தாமல் பிள்ளைகளிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தரும்படி மூதாட்டி ஜானகி கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News