உள்ளூர் செய்திகள்
வரும் 12ம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக கூட்டணி அறிவிப்பு
- ஸ்டெர்லைட் போராட்டம், மசோதா குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம்.
- 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு.
சென்னை:
ஸ்டெர்லைட் போராட்டம், மசோதா குறித்த ஆளுநரின் பேச்சை கண்டித்து வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.