உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: காதலன் மீது மகளிர் போலீசில் புகார்

Published On 2022-08-25 08:59 GMT   |   Update On 2022-08-25 08:59 GMT
எஸ்.எஸ்.எல்.சி. மாணவி காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 26). வேலைக்கு செல்லாமல் உள்ளூர் ரோமியோவாக வலம் வந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசினார். அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செய்கைகளையும் வாலிபர் செய்து மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.

இதில் பருவ வயதை எட்டிய அந்த மாணவியும் சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் காதலியின் வீட்டிற்கே செல்லும் அளவுக்கு தமிழரசன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். கடந்த ஓராண்டாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக உறுதி அளித்து மூளைச்சலவை செய்தார். காதலனின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மாணவி அவரை கணவராகவே எண்ண தொடங்கினார். இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட தமிழரசன் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.

அதன் பின்னர் படிப்படியாக மாணவியை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்து வந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தமிழரசன் பலாத்காரம் செய்ததில் அந்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளதாக கூறப்பட்டது. 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் அந்த மாணவி தமிழரசனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த அந்த மாணவி, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமண ஆசை காட்டி தமிழரசன் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டதா க புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அனுபல்லவி போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. மாணவி காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News