மகனின் நண்பருக்கு பாலியல் தொல்லை- மளிகை கடைக்காரர் கைது
- கடைக்குள் சென்றதும் சிறுவனுக்கு வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், வாசுதேவனின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தான்.
- மகனின் நண்பருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை அருகே உள்ள துடியலூர் பிரஸ்காலனி பாலாஜி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 44). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நோட்டு-புத்தகம் வாங்குவதற்காக சென்றான். அந்த சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனும், மளிகைக் கடைக்காரர் வாசுதேவனின் மகனும் நண்பர்கள் ஆவர்.
இதனால் அந்த சிறுவன் வாசுதேவனுக்கு நன்கு அறிமுகமானார். நோட்டு புத்தகம் வாங்கச் சென்ற சிறுவனை ஏன் வெளியே நிற்கிறாய், கடைக்குள் வா என வாசுதேவன் அழைத்தார்.
கடைக்குள் சென்றதும் அந்த சிறுவனுக்கு வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், வாசுதேவனின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தான்.
பின்னர் கடையில் நடந்த சம்பவம் குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி அழுதான். உடனே சிறுவனின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வாசுதேவனை கைது செய்தனர்.