பூந்தமல்லி அருகே மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
- திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மதுக்கடைகள் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன. இந்தநிலையில் தற்போது அந்த பகுதியில் 3-வதாக மேலும் ஒரு மதுக்கடை திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு வரதராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், புதிய மதுக்கடை திறக்க கூடாது என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி அருகில் உள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.