உள்ளூர் செய்திகள் (District)

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு- சென்னை கடை வீதிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு

Published On 2022-10-22 11:13 GMT   |   Update On 2022-10-22 11:13 GMT
  • மக்கள் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
  • போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு சந்திப்பு மற்றும் கோயம்பேடு பேருந்து முனையம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு சந்திப்பு மற்றும் கோயம்பேடு பேருந்து முனையம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது கூடுதல் கமிஷனர்கள் அன்பு (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News