null
தங்கை திருமணத்துக்காக 'போட் டோசூட்' நடத்த வரவழைத்து ஸ்டூடியோ உரிமையாளரின் ரூ.7¾ லட்சம் பொருட்கள் திருட்டு
- கேமரா உள்ளிட்ட பொருட்களை ரங்காராவ் திருடிச்சென்றது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்காராவை வலை வீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). ஸ்டூடியோ உரிமையாளர். திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ஆந்திராவை சேர்ந்த ரங்காராவ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரங்காராவ் தனது தங்கைக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அதற்கு 'போட்டோ சூட்' நடத்த வேண்டும் என்று ராஜேசிடம் கூறி அவரை புதுவைக்கு அழைத்து வந்தார். இருவரும் புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர். அவரது தங்கை மறுநாள் வருவதாக கூறினார்.
இந்த நிலையில் இருவரும் அண்ணாசாலைக்கு சென்றனர். ரங்காராவ் அங்கு ராஜேசை நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என கூறிச்சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் ராேஜஷ் தான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வைத்திருந்த ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை ரங்காராவ் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்காராவை வலை வீசி தேடி வருகின்றனர்.