உள்ளூர் செய்திகள்

நான் யார் பக்கமும் இல்லை- சசிகலா

Published On 2022-12-23 06:31 GMT   |   Update On 2022-12-23 06:31 GMT
  • அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
  • அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன்.

சென்னை :

சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

* நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன்.

* நான் இருக்கும் வரை அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள்.

* அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன்.

* அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது

* ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

* தனக்கு பின்னால் யார் வந்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும்.

* சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என ஜெயலலிதா தான் மருத்துவர்களிடம் சொன்னார்.

* பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

Tags:    

Similar News