உள்ளூர் செய்திகள் (District)
நிதி தொடர்பாக சரியான செய்தி வெளியிட வேண்டும்- தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வசந்த் வலியுறுத்தல்
- ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.
- நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும்.
கன்னியாகுமரி:
நிதி தொடர்பாக தவறாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வச்ந்த் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாய் முழுவதும் (100%) மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று அந்த நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும் என கேட்டு கொண்டேன்.
தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.