உள்ளூர் செய்திகள்

மனு அளிக்க வந்தவர்கள்.

கடையநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-10-11 07:32 GMT   |   Update On 2022-10-11 07:32 GMT
  • சின்னதம்பி நாடாரூர் விலக்கில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
  • மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்வதற்கு பெரிதும் அச்சப்படுகின்றனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.

அதில் கள்ளம்புளி-சேர்ந்தமரம் சாலையில் சின்னதம்பி நாடாரூர் விலக்கில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைக்கு செல்லும் மது அருந்துபவர்களால் அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கடை தொடங்கியதில் இருந்து இதுவரையில் 8 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர் எனவும் சின்னத்தம்பி நாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவ்வழியே செல்வதற்கு பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை மூடிவிட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News