உள்ளூர் செய்திகள் (District)

கைதான ஜெகதீஷ்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-07-17 08:56 GMT   |   Update On 2022-07-17 08:56 GMT
  • தூத்துக்குடி கே.டி.சி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • வாலிபரின் மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் 10 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கே.டி.சி.நகர் கொத்தனார் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொத்தனார் காலனியில் இருசக்கர வாகனத்துடன் சந்தே கப்படும்படி நின்ற வாலி பரை பிடித்து விசாரித்தனர்.

அந்த வாலிபர் தூத்துக்குடி மீளவிட்டான்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்( வயது 21) என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரையும், அவரது மோட்டார் சைக்கிளையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் 10 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News