உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2023-02-13 09:07 GMT   |   Update On 2023-02-13 09:07 GMT
  • முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சுபாசை, போலீசார் சோதனை செய்தனர்.
  • சுபாசிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:

கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே தனிப்பிரிவு காவலர்கள் மஜித், வேலாயுதம் ஆகியோர் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அந்த வாலிபர் மேலகடையநல்லூர் மலம்பேட்டை தெருவை சேர்ந்த முருகையா என்பவரது மகன் சுபாஷ்(வயது 21) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேஷ் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News